பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன் பெங்களூருவில் பைக் டாக்சியில் சென்ற பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். பெண்கள் பாதுகாப்பு, ஆட்டோ ஓட்டுநர்களின் வருவாய் பாதிப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தடை விதிப்பு என தெரிவித்துள்ளது.