இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிற நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை ஒன்றிய பாஜ அரசு விற்கக் கூடாது. அப்படி விற்குமேயானால், அந்த பங்குகளை தமிழக அரசு வாங்குவதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுத கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியாருக்கு தாரைவார்ப்பது தடுத்து நிறுத்த முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post நிலக்கரி நிறுவன பங்குகளை தனியாருக்கு தாரைவார்ப்பதா? திரும்ப பெறாவிட்டால் ஒன்றிய அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: செல்வப்பெருந்தகை எச்சரிக்கை appeared first on Dinakaran.