மக்களை ஏமாற்றி பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார்: நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி

வேலூர்: மக்களை ஏமாற்றி பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார் என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடப்போவதாக நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் அறிவித்திருந்தார். இந்நிலையில், ஆரணியில் பிரபலமான ஒருவர் போட்டியிடுவதாகவும், எனவே மன்சூர் அலிகான் வேலூரில் போட்டியிடப்போவதாக அக்கட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வேலூரில் நடிகர் மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; மக்களை ஏமாற்றி பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார் என்றும், தேர்தல் பிரச்சாரத்திற்கு சினிமா பிரபலங்களை அழைத்து வரும் திட்டம் ஏதுமில்லை என்று அவர் கூறினார். மேலும், கூட்டணி தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்; ஆனால் பேச யாரும் வரவில்லை என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

The post மக்களை ஏமாற்றி பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார்: நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: