அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா: எம்எல்ஏ பங்கேற்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே அரசு கலை கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் இசிஆர் சாலையையொட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு, முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு, அரசு கலைக் கல்லூரிகளின் சென்னை மண்டல இயக்குனர் ராவணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சுகந்தி, நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணி சீமான், கவுன்சிலர் தேசிங்கு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி கலந்து கொண்டு 2018 – 2021, 2019-2022ம் ஆண்டில் படித்து முடித்த 373 மாணவ – மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

மேலும் போட்டி மிகுந்த இந்த உலகில் முன்னேறிட மாணவ, மாணவிகள் தங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் நமது கொள்கையில் இருந்து நாம் மாறக்கூடாது. நம்மை நாமே குறைவாக நினைக்க கூடாது. அனைவரும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு தாயராக வேண்டும் என மாணவர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். அப்போது, மாணவ – மாணவிகள் பலர் தாங்கள் பெற்ற பட்டங்களை பேராசிரியர்கள், துறைகளின் தலைவர்களிடம் காட்டி வாழ்த்து பெற்றனர். இதில், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ – மாணவிகள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: