ஆண்டிமடம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விளையாட்டு விழா

அரியலூர்: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விளையாட்டு விழா ( இணைவோம் மகிழ்வோம்) நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் ஆண்டிமடம் வட்டார மருத்துவ அலுவலர் திரு கந்தசாமி அவர்கள் தலைமையிலும், வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு.அருமைராஜ் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளில் 60 மாற்றுத்திறன் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் முட நீக்கியல் நிபுணர், கணினி விவரப் பதிவாளர், பள்ளி மேலாண்மை குழு கணக்காளர்கள், இல்லம் தேடி கல்வி வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் அனைவரும் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். அனைத்து மாற்று திறன் குழந்தைகளுக்கும் தேனீர்,சிற்றுண்டி,மதிய உணவு,தண்ணீர் பாட்டில்,பதக்கம், பரிசுபொருள் வழங்கி பாராட்டினார். போக்குவரத்து பயணப்படி கலந்து கொண்ட 60 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கும் ரூபாய் 100 வழங்கப்பட்டது.

The post ஆண்டிமடம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விளையாட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: