கேரள மாநில அரசை வழக்கை திரும்பப் பெறுமாறு எப்படி நிபந்தனை விதிக்கலாம்?.. ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: கேரள மாநில அரசை வழக்கை திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசு எப்படி நிபந்தனை விதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கூடுதல் கடன் பெற கேரள மாநில அரசை அனுமதிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கூடுதல் கடன் பெற அனுமதி தர வேண்டுமெனில் வழக்கை கேரள அரசு திரும்ப பெற வேண்டுமென ஒன்றிய அரசு நிபந்தனை விதித்தது. கேரள அரசுக்கு ஒன்றிய அரசு எப்படி அத்தகைய நிபந்தனையை விதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

The post கேரள மாநில அரசை வழக்கை திரும்பப் பெறுமாறு எப்படி நிபந்தனை விதிக்கலாம்?.. ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: