யஷ் ரத்தோட் 141 ரன் (200 பந்து, 18 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் அக்ஷய் வாத்கர் 77 ரன், அமன் மொகடே 59, துருவ் ஷோரி 40, கருண் நாயர் 38, ஆதித்யா 21 ரன் விளாசினர். ம.பி. பந்துவீச்சில் அனுபவ் அகர்வால் 5 விக்கெட் கைப்பற்றினார். கெஜ்ரோலியா, கார்த்திகேயா தலா 2, ஆவேஷ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 321 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ம.பி. அணி 4ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 228 ரன் எடுத்துள்ளது.
யஷ் துபே 94, ஹர்ஷ் காவ்லி 67, வெங்கடேஷ் அய்யர் 19, சாகர் சோலங்கி 12, ஹிமான்ஷு 8, கேப்டன் ஷுபம் ஷர்மா 6 ரன்னில் பெவிலியன் திரும்பினர். சரண்ஷ் (16), கார்த்திகேயா (0) களத்தில் உள்ளனர். கை வசம் 4 விக்கெட் இருக்க, ம.பி. வெற்றிக்கு இன்னும் 93 ரன் தேவை என்ற நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.
The post பரபரப்பான கட்டத்தில் ரஞ்சி முதல் அரையிறுதி; கடைசி நாளில் வெற்றி யாருக்கு? appeared first on Dinakaran.