அவிநாசியில் கட்சி சார்பற்ற தமிழ் மாணவர் மன்றம் துவக்க விழா

 

அவிநாசி, மார்ச் 6: அவிநாசியில் கட்சி சார்பற்ற, தமிழ் மாணவர் மன்றம் துவக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவை, காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. எழிலரசன் தொடங்கி வைத்து பேசினார். திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ் விழாவில் பங்கேற்று தமிழ் மாணவர்களிடம் வாழ்த்துரை வழங்கினார். கட்சி சார்பற்ற, தமிழ் மாணவர் மன்ற பொறுப்பாளர்கள் கோபிநாத், விவேக், சுந்தரமூர்த்தி ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர். இதில், கல்லூரி மாணவர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

The post அவிநாசியில் கட்சி சார்பற்ற தமிழ் மாணவர் மன்றம் துவக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: