கஞ்சா விற்ற 3 பேர் கைது

தர்மபுரி, மார்ச் 5:மொரப்பூர் எஸ்ஐ சீனிவாசன் மற்றும் போலீசார், மொரப்பூர் பஸ் நிலையத்தில் ரோந்து சென்றபோது, அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்றுக்கொண்டிருந்த 3 பேரிடம் விசாரிக்க முயன்றனர். அவர்கள் அங்கிருந்து ஓட முயன்றனர். அவர்களை போலீசார் துரத்தி சென்று, பிடித்து விசாரித்த போது, அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரமா பாதி(24), சம்பதி தாரூ(22), ஹிமான்சு பரிதா(25) என்பதும், அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர்.

The post கஞ்சா விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: