உடனே, ரோந்து பணியில் இருந்த பொன்னேரி போலீசார் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த இரண்டு இளம் ரவுடிகளைப் பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விசாரணையில் அவர்கள் பொன்னேரி வேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜய் மற்றும் ராகேஷ் என்பது தெரிய வந்தது. இவர்கள் பகல் நேரத்தில் பட்டாக்கத்தியை காட்டி கடைகளில் மாமுல் வசூலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவர்கள் பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை பயமுறுத்தும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கி உள்ளது.
The post பட்டாக்கத்தியுடன் திரிந்த 2 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.