சென்னை : தனக்கு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டது திட்டமிட்ட செயல் என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார். சின்னம் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “ஸ்டேப்ளர் பின், குண்டூசியை எல்லாம் சின்னம் என்றால் எப்படி ஏற்பது?. பாஜகவுக்கு தேசிய மலரான தாமரையை சின்னமாக ஒதுக்கியது ஏன்?,”இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.