பஸ் கம்பெனியில் திருட முயன்ற மேஸ்திரி கைது

தர்மபுரி, மார்ச் 4: தர்மபுரியில், தனியார் பஸ் கம்பெனியில் திருட முயன்ற மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி முகமது அலி கிளப்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்(65). பஸ் அதிபரான இவர், தனது அலுவலகத்தில் பணிமுடிந்து கடந்த 1ம் தேதி வழக்கம்போல் வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர், அலுவலகத்தின் பூட்டை உடைத்துள்ளார்.

இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் மோகனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, அவர் அலுவலகத்திற்கு விரைந்து வந்தார். சுதாரித்துக் கொண்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து பாலக்கோடு காவல் நிலையத்தில் மோகன் புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில், பாலக்கோடு கோணம்பட்டி பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி அருண்குமார்(34) என்பவர், அலுவலக பூட்டை உடைத்து திருட முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

The post பஸ் கம்பெனியில் திருட முயன்ற மேஸ்திரி கைது appeared first on Dinakaran.

Related Stories: