தற்போது மக்களவை தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ள நிலையில், ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் ஓபிஎஸ் அணியின் நெல்லை மாவட்டச் செயலாளராக இருந்த வீகேபி சங்கர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார். மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ் தனி அணியாக களம் காணும் நிலையில், தென் மாவட்டமான நெல்லையில் அவரது அணியின் மாவட்ட செயலாளர் விலகியிருப்பது மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
The post ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த மாவட்ட செயலாளர் appeared first on Dinakaran.