இதையடுத்து நீதிபதிகள், ‘‘பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் தருவது தொடர்பாக அரசு தான் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். முதலில் சிறு, குறு விவசாயிகளுக்கு பலன்கள் போய் சேரவேண்டும். கடன் தள்ளுபடி உள்ளிட்ட வழிகளில் நிவாரணம் இருக்க வேண்டும். சிறு மற்றும் குறு விவசாயிகள் ஒரே மாதிரியான அளவிற்கு நிலங்களை வைத்திருக்க முடியாது.
இதுதொடர்பாக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசின் கருத்தை, நீதிமன்றத்தின் மூலம் பார்க்க முடியாது. மானியம் வழங்குவதும் அரசின் கொள்கை முடிவே. இதில், அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும். ஏனெனில் இது 2017ல் தாக்கல் செய்யப்பட்ட மனு என்பதால் முடித்து வைக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளனர்.
The post வறட்சி நிவாரணம் என்பது அரசின் கொள்கை முடிவு: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.