பட்டிவீரன்பட்டியில் ரூ.12 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா திறப்பு

பட்டிவீரன்பட்டி, மார்ச் 3: பட்டிவீரன்பட்டி பேரூராட்சி 9வது வார்டு ராம் நகரில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா கட்டி முடிக்கப்பட்டு, இதன் திறப்பு விழா நடைபெற்றது. வத்தலக்குண்டுஒன்றிய குழு தலைவர் பரமேஸ்வரி முருகன் சிறுவர் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் கல்பனாதேவி, நகர செயலாளர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். வார்டு கவுன்சிலர் ரத்தினவேல் நன்றி கூறினார். புதிதாக திறக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவில் ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, நடைப்பயிற்சி, கழிவறை போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

The post பட்டிவீரன்பட்டியில் ரூ.12 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: