சென்னை கோடம்பாக்கத்தில் பள்ளி நிதியை கையாடல் செய்த புகாரில் அரசு பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட்..!!

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் பள்ளி நிதியை கையாடல் செய்த புகாரில் அரசு பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கோடம்பாக்கம் பதிப்பகச் செம்மல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பள்ளி நிதியை மனைவி பெயருக்கு மாற்றியது, மாணவர்களிடம் முறைகேடாக கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. பள்ளிக்கல்வித்துறை அனுமதி பெறாமல் சென்னை மாவட்டத்தை விட்டு சக்திவேல் எங்கேயும் செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

The post சென்னை கோடம்பாக்கத்தில் பள்ளி நிதியை கையாடல் செய்த புகாரில் அரசு பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Related Stories: