பிளஸ் 2 பொதுத்தேர்வு பயம் வேண்டாம் மாணவர்களுக்கு வைகோ அட்வைஸ்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: பிளஸ் 2 தேர்வு எழுதப் போகும் மாணவர்கள் பயமோ, பதற்றமோ கொள்ளாமல் தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். தேர்வில் தோல்வியுற்றால் மனநிலை பாதிப்பு அடைய தேவை இல்லை. அடுத்த வாய்ப்புகளில் அதிக மதிப்பெண்களை பெறுவோம் என்ற நம்பிக்கையை, மன திடத்தை பெற்றிட வேண்டும். எந்த துறையில் சென்றாலும் நாம் உயர முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றவர்களாக வாழ்வதே பெற்றோருக்கு நாம் செய்யும் கைமாறு என உணர்ந்து தேர்வு எழுதிட வேண்டும். எனவே, தன்னம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் தேர்வுகளை எழுதி வெற்றிபெற மாணவச் செல்வங்களை வாழ்த்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

The post பிளஸ் 2 பொதுத்தேர்வு பயம் வேண்டாம் மாணவர்களுக்கு வைகோ அட்வைஸ் appeared first on Dinakaran.

Related Stories: