இந்த நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பினோம். எனவே, எங்கள் மனுவை பரிசீலித்து, மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வில் வைகோ சார்பில் வழக்கறிஞர் ஆர்.முரளி முறையீடு செய்தார். இதனை ஏற்ற நீதிபதிகள், மதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்தனர்.
அப்போது, இந்த வழக்கில், மதிமுக அளிக்கும் விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கீடு செய்யும் பிரிவின் கீழ் பரிசீலிக்க ஆணையிட்ட நீதிபதிகள், மதிமுக பொதுச் செயலாளர் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில்தர உத்தரவிட்டு வழக்கை மார்ச் 7-க்கு தள்ளிவைத்தது.
The post மதிமுகவுக்கு கிடைக்குமா பம்பரம் சின்னம்? : தேர்தல் ஆணையம் பரிசீலிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஆர்டர்!! appeared first on Dinakaran.