அப்போது தெருநாய்கள் பூனைகள் உள்ளிட்ட விலங்குகள் மிக மோசமான நிலையில் அடைக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டு பிடித்தனர். அங்கிருந்த சில சாக்குமூட்டைகளை பிரித்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதில் 2 நாய்கள் 21 நாய் குட்டிகள் மற்றும் 15 பூனைக்குட்டிகளின் உடல்கள் கட்டிவைக்கப்பட்டிருந்தன.
முறையான விலங்குகள் பராமரிப்பு மற்றும் ஆவணங்கள் கூட இல்லை என்றும் சோதனையின் போது ஒரு மருத்துவர் கூட இல்லை என்பதையும், காப்பகத்தில் விலங்குகளுக்கு கெட்டுப்போன உணவுகளே வழங்கப்பட்டு வந்ததையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். இதை அடுத்து சென்னை ப்ளூ கிராஸ் விலங்குகள் காப்பகத்தின் அவலநிலை குறித்து தமிழ்நாடு அரசுக்கு ஆய்வு குழு விரிவான அறிக்கையை அனுப்பியுள்ளது.
The post விலங்குகளுக்கு நரகமாக மாறிய சென்னை ப்ளூ கிராஸ் காப்பகம்: சாக்கு மூட்டையில் குவியல் குவியலாக நாய்கள், பூனைகளின் உடல் appeared first on Dinakaran.