இந்நிலையில் நேற்று 3 பேரும், ஒரே பைக்கில் பல்கலைக்கழகத்தில் இருந்து திருச்சி சென்றனர். மாத்தூர் காவல் நிலையம் முன்பு சென்றபோது, எதிரே வந்த லாரி இவர்களது பைக் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில், வல்லரசு, ரெங்கநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலே பலியாகினர். படுகாயமடைந்த லெனினை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லெனின் உயிரிழந்தார். விபத்துகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பைக் மீது லாரி மோதி 3 மாணவர்கள் பலி appeared first on Dinakaran.