இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு, நிஷாந்த்துக்கு அதே பகுதியை சேர்ந்த அஜித் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இரு தரப்பினரையும் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். சமீபத்தில் வெளியே வந்த அஜித் தரப்பினர், நிஷாந்தை பழி வாங்க நோட்டமிட்டனர். நேற்றிரவு தனியாக வீட்டின் அருகே பைக்கில் அமர்ந்து கொண்டு செல்போனில் விளையாடி கொண்டிருப்பதாக அஜித் தரப்பினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே 5 பேர் கும்பல் விரைந்து சென்று, நிஷாந்த்தை வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் 5 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகக்கூடும் என்பதால், செங்கல்பட்டு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய நீதிமன்றங்களில் போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் கைதானதற்கு பிறகே உண்மையான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
The post குன்றத்தூர் அருகே லோடு ஆட்டோ டிரைவர் படுகொலை: குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் appeared first on Dinakaran.