ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை அடுத்து வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, வாதங்களை கேட்ட பிறகு உடனடியாக தீர்ப்பளித்தது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாக கையாண்டதாக உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும், ஸ்டெர்லைட் வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரித்ததில் வரம்பு மீறல் இருந்ததாக கருதவில்லை என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

The post ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: