திறன் மேம்பாட்டு பயிற்சி

திருப்பரங்குன்றம், பிப்.29: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. நாகமலை புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தனியார் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களின் மூலம் 1400 கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: