மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கல்

மதுரை, பிப்.29: தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்களை மாணவிகளுக்கு மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார். மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 3536 மாணவ,மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக எல்.என்.பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 111 சைக்கிள்களை மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார். தமிழக அரசால் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களை மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாணவிகளிடம் அவர் கூறினார். இந்நிகழ்வில் மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ரகுபதி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், கவுன்சிலர் இந்திரா காந்தி, தலைமை ஆசிரியை முருகேஸ்வரி, மாநகராட்சி அலுவலர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: