அதற்கேற்ற வகையில் அவர்களுக்கு பொருளாதாரப் பயன்கள் வழங்கப்பட வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், இது தொடர்பான பேச்சுகளின் போது ஒப்புக்கொண்டிருக்கிறார். மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை அடுத்த இரு வாரங்களில் பிறப்பிக்கப்படவிருக்கிறது. அதன்பின்னர் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது. போராட்டம் தொடர்ந்தால் அரசு நிர்வாகம் செயலிழக்கும். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களை அரசு உடனடியாக அழைத்துப் பேசி, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
The post வருவாய்த்துறை கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.