திண்டுக்கல்லில் மாசி பெருந்திருவிழா சயன கோலத்தில் கோட்டை மாரியம்மன்: திரளான பக்தர்கள் தரிசனம்

 

திண்டுக்கல், பிப். 28: திண்டுக்கல்லில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு மாசி பெருந்திருவிழா கடந்த பிப்.13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மண்டகப்படிதாரர்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் மாலையில் கலை நிகழ்ச்சி, ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.

நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு 8 மணிக்கு அம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை 6 மணிக்கு தெப்பத்தில் அம்மன் சயன கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இத்துடன் மாசி திருவிழா நிறைவடைந்தது.

The post திண்டுக்கல்லில் மாசி பெருந்திருவிழா சயன கோலத்தில் கோட்டை மாரியம்மன்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: