தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பலத்த காயமடைந்த லோகேஷை மீட்டு, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கை, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயமடைந்த லோகேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவானவர்களை கைது செய்யப்பட்ட பின்னரே முன்விரோதம் காரணமாக லோகேஷை வெட்டினார்களா? அல்லது வேறு ஏதும் காரணமாக என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
The post மது குடிக்கும்போது நண்பர்களுக்குள் தகராறு சக நண்பனுக்கு சரமாரி வெட்டு: சோமங்கலம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.