தற்போது பழைய கட்டணம் வசூலிக்கப்படுவதால் சாதாரண ரயில்களின் எண்கள் பூஜ்யத்தில் இருந்து தொடங்கும்படி மீண்டும் மாற்றப்பட்டது. மேலும் 200 கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவுக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்களில் பழைய கட்டணமே வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நெல்லை-அம்பை-தென்காசி செல்லும் பயணிகள் ரயிலில் குறைந்த பட்ச கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.10- ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றாலும், நேற்று முதல் பழைய கட்டணத்தையே வசூலித்து வருகின்றனர். இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post 4 ஆண்டுகளுக்குப் பின் குறைந்தது பயணிகள் ரயில் டிக்கெட் கட்டணம்: பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.