பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டுமென்று ஜெயலலிதா கற்றுக்கொடுத்துள்ள நிலையில், அதிமுகவில் இத்தனை ஆண்டுகள் இருந்த ஏ.வி.ராஜூ இதனை மறந்து பெண்ணுக்கு எதிரான கருத்தை கூறியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அதிமுகவுக்கு என்று பிரத்யேகமாக பெண்கள் ஆதரவு இருந்தது. ராஜூவின் பேச்சால் தற்போது அந்த ஆதரவு பாதிக்கப்பட்டுள்ளது. ராஜூவின் இந்த பேச்சால் தனது நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு நஷ்ட ஈடாக ஒரு கோடியே பத்து லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும். ராஜூவின் பேச்சை நீக்க வேண்டுமென கூகுள் மற்றும் யூ டியூப் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
The post அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜுவுக்கு எதிராக ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு மாவட்ட செயலாளர் வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை appeared first on Dinakaran.