தென்காசி: தென்காசி அருகே கோட்டைவாசல் என்ற இடத்தில் தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. லாரியை ஒட்டி வந்த முக்கூடலை சேர்ந்த ஓட்டுநர் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து காரணமாக சென்னை எழும்பூரிலிருந்து கொல்லம் செல்லும் ரயில் செங்கோட்டையில் நிறுத்தப்பட்டது.