வளர்க்க நினைக்கவில்லை ஒன்றிய அரசு விவசாயிகளை அழிக்க நினைக்கிறது

பேராவூரணி: ஒன்றிய அரசு விவசாயிகளை அழிக்க நினைக்கிறதே தவிர வளர்க்க நினைக்கவில்லை என்று ஒன்றிய அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. டெல்லியில் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை குண்டு தாக்குதல் நடத்தி விவசாயிகள் கொல்லப்பட்டதை கண்டித்தும், விவசாயிகள் போராட்டத்தை வன்முறையின் மூலம் ஒடுக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் பேராவூரணி அருகேயுள்ள ஆவணம் கைகாட்டியில் அனைத்து விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் டெல்லி போராட்டத்திற்கு சென்று திரும்பிய கைஃபா கடைமடைப் பகுதி விவசாயிகள் சங்க நிறுவனர் நவீன் ஆனந்தன் பேசியதாவது: டெல்லி, பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் அவர்களுக்கானது மட்டுமல்ல. அனைத்து மாநிலத்திற்குமானது. இந்தியாவில் விளைகின்ற அனைத்து பயிருக்கும் குறைந்த பட்ச ஆதார விலைக்காகத்தான் போராடுகின்றனர். தமிழ்நாட்டில் முக்கியமான நெல், தென்னை கொப்பரை, கரும்புக்கு முதல் கட்டமாக குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்.

The post வளர்க்க நினைக்கவில்லை ஒன்றிய அரசு விவசாயிகளை அழிக்க நினைக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: