நயினார் கோவிலில் ரூ. 10 லட்சம் மதிப்பில் பக்தர்கள் அன்னதான கூடம்: எம்பி திறந்துவைத்தார்

 

பரமக்குடி, பிப். 24: ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவிலில் உள்ள காளியம்மன் கோயிலில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அன்னதான கூடத்தை நவாஸ்கனி எம்.பி திறந்துவைத்தார். பரமக்குடி அருகே நயினார் கோவில் ஊராட்சியில் மருதவனம் மகா காளியம்மன் கோயிலில் அன்னதான கூடம் அமைத்து தர வேண்டும் என கோயில் நிர்வாகத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அன்னதானக் கூடம் அமைக்கப்பட்டது. இதனை நேற்று, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், திமுக தீர்மானக்குழு துணை தலைவர் திவாகரன், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் சக்தி, சாமுண்டி ராஜேந்திரன், நயினார் கோவில் ஒன்றிய தலைவர் வினிதா குப்புசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநாவுக்கரசு, முத்துராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜோதி மணி, காச்சாணி, நாகராஜன், கீழ காவனூர் பெரியாழ், பொறியாளர்கள் திலகவதி, ஜெயந்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் மணிவண்ணன், மணி சேகர், சாயல்குடி வட்டார காங்கிரஸ் தலைவர் அப்துல் சத்தார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட தலைவர் வருசை முகம்மது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

The post நயினார் கோவிலில் ரூ. 10 லட்சம் மதிப்பில் பக்தர்கள் அன்னதான கூடம்: எம்பி திறந்துவைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: