திருவட்டார் அருகே கல் ஏற்றி வந்த டெம்போ பறிமுதல்

குலசேகரம்,பிப்.24: திருவட்டார் அருகே செறுகோல் பகுதியில் அனுமதியின்றி பாறைகல் ஏற்றி செல்வதாக திருவட்டார் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்ததையடுத்து போலீசார் அந்த பகுதியில் திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்த டெம்போவை தடுத்து நிறுத்தியதும் டிரைவர் டெம்போவை விட்டு விட்டு தப்பி ஓடினார். டெம்போவில் அனுமதியின்றி பாறை கல் ஏற்றி வந்தது உறுதியானது. போலீசார் டெம்போவை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து டிரைவரை தேடி வருகின்றனர்.

The post திருவட்டார் அருகே கல் ஏற்றி வந்த டெம்போ பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: