இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் தகவலின் பேரில் ஊராட்சி மன்றத் தலைவர் விஜயன் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சாலை துண்டிப்பு தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் துரைக்கண்ணு ஆர்.கே. பேட்டை காவல் நிலையத்தில் காந்தி மீது புகார் செய்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், மாணிக்கம் ஆகியோர் கிராம சாலையை துண்டித்து குழி தோண்டப்பட்டுள்ள பகுதியில் பார்வையிட்டு உடனடியாக சாலை சீரமைக்க ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். பொது சாலையை சேதப்படுத்திய நபர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கேட்டுக்கொண்டனர்.
The post ஆர்.கே. பேட்டை அருகே ஜேசிபி இயந்திரம் மூலம் கிராமசாலை துண்டிப்பு appeared first on Dinakaran.