எப்போதும் புதிய மற்றும் வித்தியாசமான ஒன்றை முயற்சிக்கத் தயாராக இருக்கிறார், அது ரன்-அப், டெலிவரி ஆக்ஷன் அல்லது, பேட்ஸ்மேனை நிலைகுலைய வைக்கும் டெலிவரிகளாக இருக்கலாம். 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நேரத்தில் 2 இந்திய அணிகள் விளையாடியபோது, அஸ்வினுக்கு இந்திய கேப்டன் பதவி கிடைத்திருக்க வேண்டும். ஆனாலும், சிறப்பாகச் செயல்பட்டீர்கள் அஸ்வின். நீங்கள் மேலும் பல விக்கெட்டுகளையும், புதிய பந்துவீச்சுகளையும் எதிர்காலத்தில் வித்தியாசமான பந்துவீச்சு முறைகளையும் பெற வாழ்த்துகிறேன்” என்று கூறி இருக்கிறார்.
ஒரே நேரத்தில் இரண்டு இந்திய அணிகள் என கவாஸ்கர் குறிப்பிடும் நிகழ்வு 2021ல் நடந்தது. அப்போது இந்திய டெஸ்ட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றது. அதே சமயத்தில் ஒருநாள் தொடரில் பங்கேற்க மற்றொரு அணி இலங்கை சென்றது. அப்போது லாக்டவுன் விதிமுறைகள் இருந்ததால் ஒரே நேரத்தில் இரண்டு அணிகளை அனுப்பியது பிசிசிஐ. அப்போது டெஸ்ட் அணிக்கு அஸ்வின் கேப்டனாக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. ஆனால், அது நடக்கவில்லை. அதைத்தான் கவாஸ்கர் தற்போது குறிப்பிட்டு இருக்கிறார்.
The post அஸ்வினை இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக்கி இருக்க வேண்டும்: கவாஸ்கர் பேட்டி appeared first on Dinakaran.