அறந்தாங்கி வட்டத்தில் 27ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27 ம் தேதி செவ்வாய்கிழமை காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கின்றனர். எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள் மற்றும் வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானியதிட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் மெர்சி ரம்யா, தெரிவித்துள்ளார்.

The post அறந்தாங்கி வட்டத்தில் 27ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: