முழுநேர அரசியல்வாதி யார் என்று என்னை கேள்வி கேட்பவர்கள், வாக்களிக்காத இந்த 40 சதவீதம் யார் என்று கேட்க முடியுமா? இதுபோன்ற நிலையில், 95 லட்ச ரூபாய் மட்டுமே செலவு செய்யும் நேர்மையானவன் வெற்றிபெறவே முடியாது. என்னை அரசியலுக்கு வரவழைப்பது கஷ்டம் என்றார்கள். ஆனால், போக வைப்பது அதைவிட கஷ்டம். எஞ்சிய வாழ்நாள் முழுக்க இனி இப்படித்தான். இனி எனது எல்லாம் உங்களுடையதுதான். விவசாயிகளுக்கு இன்றைக்கு தமிழகம் செய்திருக்கக்கூடிய விஷயத்தில் 10 சதவீதம் கூட ஒன்றியம் செய்யவில்லை. டெல்லியில் விவசாயிகளை தடுக்க ஆணி படுக்கை போடுகிறார்கள். அதேநேரம், இங்கு நாம் விவசாயிகளை மதிக்கிறோம். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணி இறுதியானவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
The post அரசியலில் இருந்து என்னை போக வைப்பது மிகவும் கஷ்டம்: கமல்ஹாசன் பேச்சு appeared first on Dinakaran.