மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு ஆசிரியருக்கு 25 ஆண்டு சிறை

நாகப்பட்டினம்:மயிலாடுதுறை மாவட்டம் திருவிளையாட்டம் பிரதான சாலையை சேர்ந்தவர் நாராயண பிரசாத் (57). இவர், பெரம்பூர் அடுத்த நல்லாடை அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியபோது, அப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார். இது குறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போக்சோ சட்டத்தில் நாராயணபிரசாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நாகப்பட்டினம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி மணிவண்ணன், ஆசிரியர் நாராயண பிரசாத்துக்கு, 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.70 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து நாராயண பிரசாத் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

The post மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு ஆசிரியருக்கு 25 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: