புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த பொய்யான பிரசாரத்தை தடுக்க வேணும்: விழிப்புணர்வு ஏற்படுத்த யுஜிசி உத்தரவு

புதுடெல்லி: புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தி உள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி), அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் புதிய குற்றவியல் சட்டத்தை (இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம்) நிறைவேற்றின. ஜனாதிபதி திரவுபதி முர்முவும், புதிய குற்றவியல் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இச்சட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஆனால் புதிய குற்றவியல் சட்டத்தில் குழப்பம் இருப்பதாகக் கூறி சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

மேலும் தனிமனித சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாவும், காவல்துறை சித்திரவதை அதிகரிக்கும் என்றும் பொய்யான பிரசாரம் செய்யப்படுகிறது. எனவே, இந்த சட்டம் குறித்த உண்மைகளை மாணவர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு புதிய குற்றவியல் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

The post புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த பொய்யான பிரசாரத்தை தடுக்க வேணும்: விழிப்புணர்வு ஏற்படுத்த யுஜிசி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: