எண்ணூர் வாயுக் கசிவு ..”ரூ.5.9 கோடி நிவாரணம் கேட்கப்பட்டுள்ளது” : அமைச்சர் மெய்யநாதன்

சென்னை : எண்ணூர் அமோனியா வாயுக் கசிவு தொடர்பாக நிறுவனத்திடம் இருந்து ரூ.5.9 கோடி நிவாரணம் கேட்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். அமோனியா வாயுக் கசிவு தொடர்பாக மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சட்டப்பேரவையில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பேசிய அமைச்சர் மெய்யநாதன்,”அமோனியா வாயு கசிவு 20 நிமிடத்தில் முற்றிலும் நிறுத்தம் செய்யப்பட்டது. அமோனியா வாயு கசிவுக்கு காரணமாக கோரமண்டல் ஆலையில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது. அமோனியா எடுத்து செல்ல அனைத்து இடங்களிலும் முழு தானியங்கி கட்டுப்பாடு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, “இவ்வாறு தெரிவித்தார்.

The post எண்ணூர் வாயுக் கசிவு ..”ரூ.5.9 கோடி நிவாரணம் கேட்கப்பட்டுள்ளது” : அமைச்சர் மெய்யநாதன் appeared first on Dinakaran.

Related Stories: