திருக்குவளையில் பயணிகள் நிழற்குடை திறப்பு

கீழ்வேளூர்: திருக்குவளையில் பயணிகள் நிழல்குடை திறப்பு விழா நடந்தது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை கடைத்தெருவில் பேருந்து நிறுத்தத்தில் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் செலவில் பயணிகள் நிழல்குடை (செட்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழல்குடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு நாகப்பட்டினம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன் ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கவுசல்யா இளம்பரிதி ஆகியோர் முன்னிலை வைத்தனர் ஒன்றிய குழு உறுப்பினர் செல்வம் வரவேற்றார். புதிய நிழல்குடையை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் திறந்து வைத்தார். விழாவில் கீழையூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மலர்வண்ணன் பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், கீழையூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் பாத்திஆரோக்கியமேரி, வெற்றிச் செல்வன், ஒன்றிய குழு உறுப்பினர் சுதாஅருணகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டானர்.

The post திருக்குவளையில் பயணிகள் நிழற்குடை திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: