காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தினால் உரிய நிவாரணம் திருமங்கலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தகவல்

திருமங்கலம்: காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தினால் வேளாண்மை அதிகாரிகளிடம் கடிதம் வாங்கி வனத்துறையில் கொடுத்தால் உரிய நிவாரணம் உடனடியாக கிடைக்கும் என திருமங்கலத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. தாசில்தார் மனேஷ்குமார் தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்கனர் சொர்ணபாரதி முன்னிலை வகித்ததார். இதில் வேளாண்மை, ஊரகவளர்ச்சி துறை, வனத்துறை, வருவாய் துறையினர் மற்றும் தாலுகா அளவிலான விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தினால் உரிய நிவாரணம் திருமங்கலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: