அப்போது பின்னால் பாதுகாப்புக்கு வந்த வாகனத்தில் இருந்து காவலர்கள் இறங்கி அந்த மர்ம நபரை பிடித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் மதுரையை சேர்ந்த வெங்கடேசன்(28) என்றும், தனது ஊரில் கட்டப்படும் கோயிலுக்கு எடப்பாடியை சந்தித்து நிதி பெற வந்ததாக தெரிவித்துள்ளார். இருந்தாலும் அத்துமீறி எதிர்க்கட்சி தலைவர் வீட்டிற்குள் சென்றதால், பின்னணியில் காரணம் ஏதேனும் உள்ளதா என போலீசார் தொடர்ந்து வெங்கடேசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post எடப்பாடி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் appeared first on Dinakaran.