உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி, குஜராத் ராஜ்கோட், மங்களகிரி (ஆந்திரா), பதிண்டா (பஞ்சாப்), கல்யாணி (மேற்கு வங்கம்) ஆகிய மாவட்டங்களில் பிப்ரவரி 25ம் தேதி வரை ஏய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் வெங்கடேசன் எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அடுத்த 6 நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ்களும் திறக்கப்பட்டு விட்டன மதுரையைத் தவிர . தமிழ்நாட்டுக்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானே? என்று புகைப்படங்களை பதிவிட்டு அவர் கேள்வி எழுப்பினார்.
The post தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா?: வெங்கடேசன் எம்.பி கேள்வி appeared first on Dinakaran.