சென்னையை உலகத்தரம் வாய்ந்த மாநகரமாக மாற்றியமைத்திட சர்வதேச கண்காட்சிகள், பன்னாட்டுக் கூட்டங்கள் நடத்திடும் வகையில், உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு அரங்கம் நவீன வசதிகளுடன் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு பகுதியில் மூன்று லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ளது. 5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம், 10 ஆயிரம் நபர்கள் பார்வையிடும் வசதிகொண்ட கண்காட்சி அரங்கம், கூட்ட அரங்குகள், கலை அரங்கம் ஆகிய வசதிகளுடன் அமையவுள்ள இந்தப் பன்னாட்டு அரங்கம் சிங்காரச் சென்னையின் நவீன அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும்.
The post 5 ஆயிரம் இருக்கைகளுடன் முட்டுக்காட்டில் உலகத்தரத்துடன் கலைஞர் பன்னாட்டு அரங்கம் appeared first on Dinakaran.