பலமுறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்து ஆஜராகவில்லை. இதனையடுத்து வில்வேந்தனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி எழும்பூர் மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பல வருடங்களாக தேடியும் வில்வேந்தனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று புளியந்தோப்பு போலீசார் வில்வேந்தனை சூளை பகுதியில் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post 17 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தவர் கைது appeared first on Dinakaran.