இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர் ஒன்றிய உள்துறை மந்திரி அமித் ஷா உள்பட ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் வியாழக்கிழமை தமிழகம் திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில் ஆளுநர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளது பெரும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post தமிழ்நாடு ஆளுநர் திடீர் பயணத்தால் பரபரப்பு.. பட்ஜெட் தாக்கலாகும் நேரம் பார்த்து 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி!! appeared first on Dinakaran.