உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு

அரூர்: தர்மபுரி மாவட்டத்தில், உணவு பாதுகாப்பு துறை சார்பில் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா, உணவு பகுப்பாய்வு வாகன முதுநிலை பொது பகுப்பாய்வாளர் சாமுண்டீஸ்வரி(பொ) ஆகியோரது வழிகாட்டுதலின்பேரில், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், இளநிலை பொது பகுப்பாய்வாளர் கார்த்திக் உள்ளிட்ட குழுவினர், கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் உணவு பாதுகாப்பு நடமாடும் வாகனம் மூலம் உணவு பாதுகாப்பு, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். பள்ளி தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன், நிர்வாகி தமிழ்மணி, பள்ளியின் முதல்வர் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், வெற்றிவேல் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். …

The post உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: