அப்போது அந்த காரின் இன்ஜின் மற்றும் சேஸ் நம்பர் தவறாக இருந்ததால் பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் அன்பழகன், சையதுவை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 6 பேர் கொண்ட கும்பல், பாஜ கொடி கட்டிய ஒரு காரில் தெற்குபொய்கைநல்லூரில் உள்ள அன்பழகன் வீட்டிற்கு வந்து அவரை மிரட்டி சொகுசு காரை திருடி சென்றனர். இது தொடர்பாக அன்பழகன், வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் நாகப்பட்டினம் – திருவாரூர் மாவட்ட எல்லை கானூர் என்ற இடத்தில் உள்ள சோதனை சாவடியில் நேற்று சொகுசு காரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் திருப்பத்தூரை சேர்ந்த சுதாகர்(46), மணிகண்டன்(26), விக்னேஷ்(26), வருண்கிஷோர்(26), சென்னை சேர்ந்த சங்கர்(39), திருவண்ணாமலையை சேர்ந்த சுகுமார்(40) என்பதும், சையது கூறியதால் காரை திருடி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து வோளங்கண்ணி போலீசார் வழக்கு பதிந்து 6 பேரையும் கைது செய்து, கார்களை பறிமுதல் செய்தனர்.
The post பாஜ கொடியுடன் காரில் வந்து சொகுசு காரை திருடிய கும்பல் appeared first on Dinakaran.