மகிளா காங்.சார்பில் பொதுக் கூட்டம்

தர்மபுரி: தர்மபுரியில் நேற்று மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடந்தது. பெண்களுக்கான நீதி -நாங்கள் தயார் என்ற தலைப்பிலான கூட்டத்திற்கு, மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரேவதி வரவேற்றார். முன்னாள் எம்பியும், காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளருமான தீர்த்தராமன் துவக்கி வைத்து பேசினார். சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயந்தி, திமுக மாவட்ட மகளிரணி தலைவர் முத்துலட்சுமி, மகிளா காங்கிரஸ் துணைத்தலைவர் விஜயா, தனலட்சுமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் நரேந்திரன், ஜெய்சங்கர், அர்த்தநாரி, விநாயகம், குமரவேல், ஐஎன்டியூசி தங்கவேல், நகர தலைவர் வேடி, வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post மகிளா காங்.சார்பில் பொதுக் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: